தமிழ்மொழி விழா

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் இந்திய நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரலில் ஏற்பாடு செய்திருந்தன.
மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 29ஆம் ஆண்டு முத்தமிழ் விழா, ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்தேறியது.
தமிழ்மொழி விழாவை ஒட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 11வது முறையாகச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.